இன்று பகவான் ரமண மஹர்ஷியின் 63வது ஆராதனை குருபூஜை விழா. அவர் அருள் நம் எல்லோர் மீதும் பொழிவதாக!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!
ரமணாஞ்சலி
பாடல் : அரவிந்த்
அடித்தாலும் அணைத்தாலும்
உனையன்றித் துணையேது ரமணா
நீயே என்றும் அடைக்கலம்
நினதருளே எனக்கு துணைக்கரம்
அடித்தாலும் அணைத்தாலும்
உனையன்றித் துணையேது ரமணா
நீயே என்றும் அடைக்கலம்
நினதருளே எனக்கு துணைக்கரம்
அருள்விழியாய் எம்மை நோக்குவாய்
பாவங்கள் அனைத்தும் போக்குவாய்
அருள்விழியாய் எம்மை நோக்குவாய்
பாவங்கள் அனைத்தும் போக்குவாய்
குருவுருவாய் நின்று அருளுவாய்
குருவுருவாய் நின்று அருளுவாய்
குறைகள் எல்லாம் அறவே விலக்குவாய்
(அடித்தாலும்….)
மனமென்னும் மாயோனை மாய்த்திடுவாய்
மனமற்ற மனமடைய வழி தருவாய்
மனமென்னும் மாயோனை மாய்த்திடுவாய்
மனமற்ற மனமடைய வழி தருவாய்
தூயவனாய் என்னை ஆக்கிடுவாய் – என்றும்
தூயவனாய் என்னை ஆக்கிடுவாய்
நான் யார் என்று காட்டிடுவாய் – எனக்கு
நான் யார் என்று காட்டிடுவாய்
(அடித்தாலும்….)
நின் அருள்சோதி தனை அடைய
வரம் தருவாய் – நின் அருள்சோதி
தனை அடைய வரம் தருவாய்
நீயாக என்னை நீ மாற்றிடுவாய்
(அடித்தாலும்….)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!
*************