பல ஆண்டுகளாக குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், பல ஆண்டுகளாக பல புண்ணியத் தலம் சென்றும் குழந்தைப்பேறு தாமதமாக உள்ளவர்கள் இந்தப் பதிகத்தைப் பக்தியோடு பாராயணம் செய்ய நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கையோடு செய்து வர நற்பலனுண்டாம்.
இதுபற்றி பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், “இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்தி பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தி யாம்; சந்ததி விருத்தியாம்.”என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.