தேகத்தையே ஆத்மா என்று மயங்கும் புத்தியே த்வைதம்; அந்த நிலை இல்லாமல் போவதே அத்வைதம்.
- ஸ்ரீரமணர்
தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
- ஸ்ரீரமணர்
ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
- ஸ்ரீரமணர்
இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God.
- ஸ்ரீரமணர்
முன் பின் தெரியாதவனை உபசரித்தால் கடவுளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
-பைபிள்
புலன்கள் உனக்குக் கட்டுப்பட்டு அடங்குமானால் உன் உள்ளத்தின் ஆழத்தில் உள்ள இறைவனைக் காண்பது உறுதி.
- ஆதி சங்கரர்
தினம்தோறும் குருவைத் தியானித்தலும், இறைவனை வழிபடுதலும் மனிதனை உயர்த்தும்.
- சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்
மனிதன் கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் தன்னில் முழுமையாக இறைவனைக் காண்கிறான்.
-ஸ்ரீஅன்னை
தன் குறைகளையும் தவறான செயல்களையும் ஒப்புக் கொண்டு அவற்றினிலிருந்து விலகுவதும், அவற்றை விலக்குவதுமே முக்திக்கு வழியாகும்.
-ஸ்ரீஅரவிந்தர்
கருணையும், மன்னிக்கும் தன்மையும் சாந்தியும் நிறைந்தவர்களின் இதயமே கடவுள்
- ராமதாசர்
ஏழைகள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவன், பகலெல்லாம் நோன்பு நோற்று இரவு முழுவதும் இறைவனைத் தொழுபவனை விட உயர்ந்தவன்
- நபிகள் நாயகம்
உண்மை, பற்றின்மை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.
-கபீர்
தன் உயிரைக் காக்கவேண்டி வந்தாலும் அதற்காக தர்மத்தைக் கைவிடக் கூடாது.
-மகாபாரதம்
எளியவர்களுக்கு ஒரே புகலான இறைவனை, சரணடைவதன் மூலம் மட்டுமே, நாம் அவன் அருளைப் பெற முடியும்.
- சுவாமி விவேகாநந்தர்
சொர்க்கம் வேண்டும் என்பதற்காக இறைவனைத் தொழுபவன் ஒரு வியாபாரி; நரகத்தில் இருந்து விடுபட இறைவனை வேண்டுபவன் ஒரு கோழை; இறைவனுக்காக மட்டுமே இறைவனை வழிபடுபவனே உண்மையான பக்தன்.
- இமாம் கஸ்ஸாலி.
ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம்.
-பகவத்கீதை
அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருபெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்.
- வள்ளலார்
**************




