மகான்களும் விஜயதசமியும் -1

விஜயதசமி

அன்னை ஸ்ரீ துர்கா
அன்னை ஸ்ரீ துர்கா

தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ துர்கா தேவி
ஸ்ரீ துர்கா தேவி

விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.

அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!

 இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந் நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்புப் பெற்றதாகிறது. ஆம், இந் நன்னாளில் தான் மகா அவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகா சமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி கொண்ட தினமும் இதுவே!

ஸ்ரீ ஷிர்டி பாபாவின் வரலாறுஸ்ரீ சாயிபாபா

எங்கு, எப்போது தோன்றினார் என்பதை வரையறுக்க இயலாமல் சுயம்பு மூர்த்தமாய் அவதாரம் செய்தவர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா. இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதார புருடர். பல்வேறு லீலைகள் செய்தவர். பல மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்தவர். இன்றும் ஷிர்டி தலத்திற்கு தம்மை நாடி வருவோரின் பிரச்சனைகளை சுட்சுமமாக இருந்து தீர்த்துக் கொண்டிருப்பவர்.

இந்து-இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் ’உரூஸ்’ ஊர்வலத்தையும்  அவர் நடத்தி வந்தார். அவர் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ ‘அல்லா மாலிக்’ என்ற அல்லாஹின் திரு நாமத்தை. இந்துக்களும் அவரது பக்தர்களாக இருந்தார்கள். இஸ்லாமியர்களும் அவர் பக்தர்களாக இருந்தார்கள். அவர் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் அவர் ’பாபா’. பாபா என்ற சொல்லுக்கு தந்தை என்பது பொருள்.

பாபா சமாதி (ஷிர்டி)
பாபா சமாதி (ஷிர்டி)

ஷீர்டியில் சாயி பாபா முதன்முதலில் பதினாறு வயது இளைஞனாகக் காட்சி கொடுத்த இடம், புனிதமான ஒரு வேப்பமரத்தடி ஆகும். அதுதான் குருஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மரத்தடிக்கு அருகில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஓர் அறையில்தான், தன் குரு வாழ்ந்து வந்ததாக பாபா கூறியுள்ளார். அங்கு எப்போதும் அணையா விளக்கு எரிய வேண்டும் என்பது அவரது ஆக்ஞை.

தான் தங்கியிருந்த மசூதியிலிருந்து, தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வது அவரது வழக்கம். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீர்டி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா
ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா

துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.  அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.

எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.

என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.

எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.

எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.

கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.

இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்

இவை பகவான் பாபாவின் புனித வாக்குகளாகும்.

ஷிர்டி குருஸ்தான்
ஷிர்டி பாபா குருஸ்தான்

பாபா 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். வருடந்தோறும் அங்கு அப்புனித நன்னாளில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

பகவானின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.

(இது ஒரு மீள்பதிவு)

அம்மனுடன் ஓர் உரையாடல்

தேவி நாராயணி அம்மனுடன் ஓர் உரையாடல்


நாராயணி அம்மன்


பெண் தெய்வம் உன்னுடன் இருப்பதாக நீ எப்பொழுது உணர்ந்து கொண்டாய்?”

 “எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்போது கோவிலுக்குப் போய் அபிஷேகம் நடப்பதைக் கவனிப்பேன். பால், நெய், தேன், இளநீர் போன்ற இவை அனைத்தும் என்மீதே பெய்யப்படுவதாக உணர்வேன். ஆகவே நானும் அம்மனும் இருவேறு கூறுகள் அல்ல என்ற உணர்வுதான் எனது முதல் அனுபவம். நான் என்னையே வழிபட்டுக் கொள்வதாக உணர்வதும் வழக்கமாகிவிட்டது. 1992ல் அம்மன் என்னில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.”

“வெறும் கையில் பொருள்களை வரவழைக்கும் திறன் பெற்றதை நீ எப்பொழுது அறிந்து கொண்டாய்?”

“எப்போது ஆரம்பமாயிற்று என்று எனக்குச் சரியாக ஞாபகமில்லை. எல்லோரையும் போல, நானும் குழந்தையாக இருந்தபோது, நான் எதற்காவது ஆசைப்பட்டால் அது என் கைக்கு வர வேண்டுமென்று விரும்பினேன். பிறகு, அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது. நான் மிகவும் சிறுவனாக இருந்தபடியால் பள்ளி சகாக்களுடன் விளையாட்டாகவே இந்தச் சக்தியைப் பயன்படுத்தினேன். விளம்பரம்போலத்தான். எனக்குப் பதினாறு வயதானபோது அதில் முழுத்தெளிவு ஏற்பட்டது. என் நினைவில் நிற்கிற இன்னொரு விஷயம், எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதில், சுற்றப்புற மக்கள் என்னிடம் வந்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். நான் நம்பிக்கையோடு பதில் சொல்வது வழக்கம். ஒருவன் தேர்வில் வெற்றி பெறுவானா, யாரோ ஒருவர் நோயிலிருந்து குணமடைவாரா, ஏதாவது நல்லதோ கெட்டதோ நடக்குமா என்றெல்லாம் கேட்பார்கள். இது எப்படித் துவங்கியது என்று எனக்கு ஞாபகமில்லை. நான் எந்த ஆன்மீக சாதனையும் (பயிற்சியும்) செய்யவில்லை. இயல்பாக வந்த வரப்பிரசாதம்தான்.”

தக தகக்கும் தங்கக் கோயில்

“உனக்கென்று ஆசானோ குருவோ உண்டா? பக்தி நூல்களை எங்கே கற்றுக் கொண்டாய்?”

“நான் எந்த குருவிடமும் சென்றதில்லை. எந்த நூலையும் படிக்கவில்லை. எதையும் நான் பார்த்ததுகூட இல்லை. நான் பெற்ற அறிவெல்லாம் என் உள்மனத்திலிருந்து ஊற்றெடுத்து வந்ததுதான். அது எப்போதும் அங்கேயே இருப்பதால் உள்ளேயிருந்து வருகிறது.”

“சில சக்திகளை நீ பெற்றிருந்தாலும் அவற்றை வெளியே காட்ட வேண்டிய அவசியம் என்ன?”

“எனது பதினாறாவது வயதில் அம்மன் சுயம்புவாக வெளியே வந்தது. அந்தச் சம்பவம் அனைவரும் அறிந்த பொதுச் செய்தியாகி விட்டது. அன்றுமுதல் “இந்தச் சக்தி மக்களை அம்மன் பக்கம் ஈர்ப்பதற்கும் அவர்கள் வளமோடு வாழ்வதற்கும் பயன்படுகிறது. உண்மையில் நான் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. இந்தச் சக்திகள் ஞானத்துக்கு உதவுவதில்லை. ஞானம் பெறுவதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவை தெய்வத்தின் கொடை. அதிகபட்சமாக தெய்வத்தின்பக்கம் மக்களை அழைத்துவரும் வருகையறிவிப்பு அட்டையாக (visiting card) அவை பயன்பட வேண்டும்

“உனக்கும் சாயி பாபாவுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?”

“நீண்டகாலமாக சாயி பாபா மனித குலத்துக்குச் சேவை புரிந்து வருகிறார். அவருக்கென்று சொந்தமாகப் பாதை உண்டு. நடந்து தேய்ந்த பாதை. அவருக்கெனத் தனியான செயல்முறைகள் உண்டு, கடவுள் தனக்கென்று பல வாகனங்களைப் படைத்துக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அம்மன் சின்ன கிராமமான ஆரியூரில் சுயம்புவாக மக்களுக்காக வெளிவர முடிவு செய்தார். இப்படித்தான் இது நடந்தது. எல்லோரும் சாயி பாபாவின் அருகே சென்றுவிட முடியாது, ஆகவே கடவுள் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகை மக்களை அடைய வெளியே வருகிறார். அவர்கள் எல்லாம் கலியுகத்தில் அழிந்து வரும் தர்மத்தைப் பாதுகாக்க அவதரித்தவர்கள். ஏராளமான ஏழை மக்கள் இங்கு வருகிறார்கள். இந்தச் சிறிய கிராமத்தில் தர்மத்தின் விதை விதைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.”

“நான் உங்களுடைய தினசரி பூஜையை கவனித்தேன். அது நீண்டு செல்கிறது. இது மேலும் உயர்ந்த சக்திகளை பெறுவதற்காகவா?”

இந்த பூஜை ஒருவரின் சொந்த மன நிறைவுக்காகத்தான். அது மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. மனத்தை அலையவிடாமல் வைத்துக்கொள்ள; சக்திகளைப் பெறுவதற்காக அல்ல. ஆனால் சக்திகள் தன்னிச்சையாக வருகின்றன. நானே அம்மனாக இருக்கும்போது, நான் ஏன் அம்மனை வழிபட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். நான் பூஜை செய்யும்போது, பிரபஞ்சம் முழுவதையுமே எனது உடம்புக்குள்ளும் மனதுக்குள்ளும் கொண்டு வந்து விடுகிறேன். முழுப் பிரபஞ்சத்தின் சார்பாக, பிரபஞ்ச நலனுக்காக அம்மனை நான் பிரார்த்திக்கிறேன்.

ஸ்ரீ சக்தி அம்மா

நன்றி : தென்றல், ஏப்ரல் இதழ்

மேலும் படிக்க இங்கே சுட்டவும்

மற்றும் இங்கே செல்லவும்.

ஓம் தத் ஸத்


*************