ஸ்கந்த ஷஷ்டியை முன்னிட்டு சில முருகன் பாடல்கள்/துதிகள்
அருணகிரிநாதர் திருப்புகழ்
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம – வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம – பரசூர
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம – கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம – அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் – மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக – வயலூரா
ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி – லையிலேகி
ஆதி அந்தவுலாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் – பெருமாளே…
வள்ளிக் கணவன் பேரை
வள்ளிக் கணவன் பேரை
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி – கிளியே
ஊனும் உருகுதடி – கிளியே
ஊனும் உருகுதடி!
மாலை வடி வேலவர்க்கு
வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே – கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே!
கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே!
(வள்ளிக் கணவன் பேரை..)
காட்டுக் கொடி படர்ந்த
கருவூரின் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி – கிளியே
வேலன் என்னும் பேரோனடி
கிளியே வேலன் என்னும் பேரோனடி!
கூடிக் குலாவி மெத்த
குகனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி – கிளியே
வெகு நாளின் பந்தமடி!
கிளியே வெகு நாளின் பந்தமடி
(வள்ளிக் கணவன் பேரை..)
மாடுமனை போனாலென்ன?
மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன? – கிளியே
குறுநகை போதுமடி!
கிளியே முருகன் குறுநகை போதுமடி!
எங்கும் நிறைந் திருப்போன்!
எட்டியும் எட்டா திருப்போன்!
குங்கும வர்ணனடி – கிளியே
குமரப் பெருமானடி!
கிளியே குமரப் பெருமானடி
வள்ளிக் கணவன் பேரை
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி – கிளியே
ஊனும் உருகுதடி – கிளியே
ஊனும் உருகுதடி
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து
சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்
புனை தீரன் அயில் வீரன்
தீரன் அயில் வீரன்
வண்ண மயில் முருகேசன் – குற
வள்ளி பதம் பணி நேசன் – உரை
வரமே தரு கழுகாசல பதிகோயிலின் வளம் நான்
வரவாதே சொல் வன்மாதே
சன்னிதியில் துஜஸ்தம்பம் – விண்ணில்
தாவி வருகின்ற கும்பம் – என்னும்
சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதினில்
தாங்கும் உயர்ந்தோங்கும்
அருணகிரி நாவில் பழக்கம் – தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் – பல
அடியார்கணம் மொழிபோதினில்
அமராவதி இமையோர்செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்
அடைக்கும் அண்டம் புடைக்கும்
கருணை முருகனைப் போற்றி – தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றி – கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமேகதி
காண்பார் இன்பம் பூண்பார்
காண்பார் இன்பம் பூண்பார்
சென்னிகுல நகர் வாசன் – தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் – செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்
புனை தீரன் அயில் வீரன்
தீரன் அயில் வீரன்
ஓம் சரவண பவ!