சூரிய வணக்கம்

”ஆதித்ய ஹ்ருதயம்” மகத்தான சக்தி வாய்ந்த மந்திரம். இராவணனுடனான போரின்போது இராமபிரான் மனச்சோர்வுற்றபோது அகத்திய மாமுனிவர் இராமனுக்கு அருளிய உபதேச மந்திரம் இது.

சூரியனின் ஆற்றலை, திறனைப் போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்து வந்தால் பகைகள் விலகும்; தடைகள் நீங்கும். வேலை, தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் தோஷங்கள் குறையும். வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும்.

sun 2

ஆனால் இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான இதை குரு உபதேசம் பெற்று, உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் அதற்கான முறையோடு கூடிப் பாராயணம் செய்தால்தான் அப்பலன்கள் கிட்டும். அப்படிச் செய்ய எல்லாராலும் இயலுமா? சம்ஸ்கிருதம் தெரியாதவர்களால் இதைச் சரிவர உச்சரிக்க முடியுமா?

முடியாது…

அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் ”சூரிய வணக்கம்” செய்து கீழ்கண்ட இந்தப் பாடலை மும்முறை பாடி வந்தால் அதே நற்பலன்கள் கிட்டும். இது உண்மை.

sun 1

ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!

– கண்ணதாசன்

வீடியோ : http://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU

(நன்றி : அரவிந்த்)