மலர்கள்

All posts tagged மலர்கள்

ஸ்ரீ அன்னையும் மலர்களும்

Published நவம்பர்17, 2009 by ramanans

அன்னையின் மலர் வழிபாடு

ஸ்ரீ அன்னை

அன்னை வலியுறுத்திய வழிபாடுகளில் மிக முக்கியமானது மலர் வழிபாடு. அன்னைக்கு மலர்களின் மீது அளவற்ற விருப்பம் உண்டு. அதன் தூய்மை, புத்துணர்ச்சி, அழகு, சுயநலமின்மை ஆகியவற்றைப் பற்றி அவர் புகழ்ந்துரைத்திருக்கிறார். ஆசிரமத்தில் தானே ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் அழகான பல மலர்களை நட்டு தம் இறுதிக்காலம் வரை பராமரித்து வந்திருக்கிறார். ‘மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்’ என்பது ஸ்ரீ அன்னையின் கருத்தாகும்.

ஸ்ரீ அன்னை, சுமார் எண்ணூறிற்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றை வைத்து இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி சாதகர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவற்றைப் பற்றி நாமும் தெரிந்து கொண்டு பயனடைவோம்.

____________________________________________________________________________________________
மலர்                              பலன்
____________________________________________________________________________________________

ரோஜா                 குறைகள் விலகும். தடைகள் அகலும். வெற்றி தரும்

மல்லிகை          சோதனைகள் நீங்கும்,  இன்பம் பெருகும்

துளசி                     மனத்தூய்மை பெருகும். பக்தி சிறக்கும்

சாமந்தி               வலிமை, புது சக்தி உண்டாகும். பகைகள் விலகும்

செம்பரத்தை      தெய்வீக அன்பு கிடைக்கும்

நித்திய கல்யாணி          முன்னேற்றம் தரும்.

எருக்கம்பூ              வல்லமை, தைரியம், மன உறுதி தரும்

செந்தாமரை          தெம்பு, வலிமை, புத்துணர்ச்சி, உயர்வு தரும்

வெண்தாமரை        தெய்வீக உணர்வு மேம்படும். மன மாசுக்கள் அகலும்

காகிதப்பூ              பாதுகாப்பு உணர்வு மிகும்.

வாடாமல்லி    நோயற்ற தன்மை, ஆயுள் விருத்தி, ஆபத்துக்கள் விலகும்

செவ்வரளி        தவறுகள் விலகி, ஒழுங்குகள் ஏற்படும்

மரிக்கொழுந்து       வெற்றியைத் தரும்

பவழ மல்லி             நியாயமான ஆசைகள் நிறைவேறும்

நந்தியாவட்டை     புத்துணர்ச்சி தரும். மனத்தூய்மை உண்டாகும்

ஸ்ரீ அன்னையைப் பணிவோம். ஆனந்தம் பெறுவோம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 410 other followers

%d bloggers like this: