மகா சக்தி ஸ்ரீ அன்னை

I have a sweet little Mother
Who lives in my heart
We are so happy together
We shall never depart.”  
                          – The Mother

1973 ஆம் ஆண்டு. நவம்பர் மாதம் பதினேழாம் தேதி. நேரம் இரவு 7.25க்கு ஸ்ரீ அன்னை மகா சமாதி அடைந்தார். அவர் மறைந்து இன்றோடு 36 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. ஸ்ரீ அன்னையை இந்நாளில் நினைவு கூர்வோம். 

ஸ்ரீ அன்னை

ஸ்ரீ அன்னை

அகில உலகுக்கும் தாயாகப் போற்றப்படும் ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் இங்கே…

‘நமக்கு ஒன்றுமே தெரியாது’ என நாம் உணர்வதே, ஞானத்தை அடைவதற்கான முதல் படி.

முழு தன்னம்பிக்கையுடனும் உண்மையான நேர்மையுடனும் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம்  நல்ல பலனுண்டு.

கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி  இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்.

இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத்  தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.

‘பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை  முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி.

சிறிய காரியங்களில் வெற்றியடைவதை விட, மகத்தான பெரிய இலட்சியங்களில் தோல்வி அடைவது  எவ்வளவோ மேல்.

மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமும், அகந்தையுமே மிக முக்கிய காரணம் ஆகிறது.

இளம் வயதில் அன்னை

இளம் வயதில் அன்னை

ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும். ஆனால் நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால், பல மடங்கு அதிகம் முன்னேற முடியும்.

ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது  ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.

நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க  விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்.

அச்சமுற்றுக் கலக்கமுடன் உன் வருங்காலத்தை எதிர் நோக்காதே.

நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண  நம்பிக்கையே

அன்னை

அன்னை

ஸ்ரீ அன்னையைப் பற்றி திரு. கங்கை அமரன் பாடிய மலர் போல மலர்கின்ற… பாடலைக் கேட்கக் கீழே சுட்டவும்.

http://www.hummaa.com/music/song/Malar+Pola/102668

http://www.hummaa.com/music/song/Malarpola+%28repeat%29/102679

http://www.hummaa.com/music/song/Malarpola+%28theme+Song%29/102127

பாடல் வரிகள் இங்கே….

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே (மலர் போல…)

அன்னையின் வருகை

அன்னையின் வருகை

ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
நதி காய நேராமல் நீருற்று தாயே!
நல் நிலம் பார்த்து தாயே!

எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே!
என் வளமான தாயே!

பசி தாகம்  காணாமல் பயிராக்கு தாயே!
ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே! (மலர் போல…)
 
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள
திரு குறையாமல் வாழ

அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்

பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை  ஒன்றாக்கு தாயே!
உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே! (மலர் போல…)

(நன்றி: கங்கை அமரன்)

மதர் சிம்பல்

மதர் சிம்பல்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மா… அம்மா… அம்மா.. அம்மா!

பாடலைக் கேட்க சுட்டவும்

http://www.hummaa.com/music/song/Ammaum+Neeyee/142306

அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்
அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி ஓம் ஸ்ரீ சைதன்யமயி ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

 

அம்மா சரணம்

அம்மா சரணம்

 அம்மா சரணம்! தாயே சரணம்! குருவே சரணம்!

ஓம் நமோ பகவதே!

 

ஸ்ரீ காக புஜண்டர்

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான். பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர். இதோ..  அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள். இவற்றை உள்ளன்போடு பூசியுங்கள். தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள். பாவங்கள் தொலையும். நன்மைகள் விளையும்.

நற்பவி! நற்பவி! நற்பவி!

ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:

ஸ்ரீ காகபுஜண்ட தியானம்

   த்விபுஜம் சத்வி நேத்ரம் ச
   ஜடாமகுட தாரிணம்
   காகதுண்ட முகம் சாந்தம்
   பஸ்ம ருத்ராஷ தாரிணம்
   முத்ரோ ருத்வய ஹஸ்தம்ச
   சிவசிந்தன மானஸம்
   பக்தா பீஷ்ட்ட ப்ரதம் தேவம்
   பாவயே முனி புங்கவம்.

   ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி

  1. ஓம் புஜண்ட தேவாய ச வித்மஹே
   த்யான ஸ்தீதாய தீமஹி;
   தந்நோ பகவான் ப்ரசோதயாத்.

  2. ஓம் காக ரூபாய வித்மஹே
   தண்ட ஹஸ்தாய தீமஹி;
   தந்நோ புஜண்ட ப்ரசோதயாத்.

  3.  ஓம் காக துண்டாய வித்மஹே
   சிவசிந்தாய தீமஹி;
   தந்நோ யோகி: ப்ரசோதயாத்.

   ஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத
   ஸ்ரீ காக புஜண்ட தேவாய நம:

ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!

 

நற்பவி! நற்பவி! நற்பவி!

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்

1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது

 இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:

  ”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
   ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
   அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
   ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
   மம தாரித்தர்ய வித்வேஷணாய
   ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

3.வடுக பைரவ மூல மந்த்ரம்:

  ”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்
   குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:

  ”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே                                     ஸ்வாந வாஹாய தீமஹி
   தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

  ”ஓம் திகம்பராய வித்மஹே                 தீர்கதிஷணாய தீமஹி                                              தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.

பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.

ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.

திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.

ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம் அல்லவா?

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரம்

      ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:

   ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:

 ஸ்ரீ ஈச்வர உவாச:-

   வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
    விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
   நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
    விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

   ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
    ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
   நகாக்ரை: சகலீசக்ரே
    யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

   பதா வஷ்டப்த பாதாளம்
    மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
   புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
    மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

   ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
    ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
   ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
    தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

   ஸர்வேந்த்ரியை ரபி விநா
    ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
   யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
    தமஹம் ஸர்வதோமுகம்!

   நரவத் ஸிம்ஹவச்சைவ
    யஸ்ய ரூபம் மஹாத்மன:!
   மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
    தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

   யந்நாம ஸ்மரணாத் பீதா:
    பூத வேதாள ராக்ஷஸா:!
   ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
    பீஷணம் தம் நமாம்யஹம்!!

   ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
    ஸகலம் பத்ர மச்னுதே!
   ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட:
    யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!
 
   ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
    ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
   பக்தாநாம் நாசயேத் யஸ்து
    ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!

   நமஸ்காராத்மகம் யஸ்மை
    விதாய ஆத்ம நிவேதனம்!
   த்யக்தது: கோகிலாந் காமாந்
    அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

   தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
    ஹ்யாத்மான: பரமாத்மன:!
   அதோஹமபி தே தாஸ:
    இதிமத்வா நமாம்யஹம்!!

   சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
    பதாநாம் தத்வ நிர்ணயம்!
   த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
    ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!

**********

மஹா நாராயண உபநிஷத்:
        அகோர மந்த்ரம்:

   அகோரேப்ப்மோஸத
   கோரேப்ப்யோ கோர கோர
   தரேப்ப்ய : | சர்வேப்ப்யஸ்

   சர்வ சர்வேப்ப்யோ நமஸ்தே
   அஸ்து ருத்ர ரூபேப்ப்ய: || 

இதை அனுதினமும் சொல்லி வர துஷ்ட, பேய், பிசாசுத் தொல்லைகள், ஏவல் செய்வினைகள், துன்பங்கள் நீங்கும்.

*******