நீர் மேல் நடக்க முடியுமா? இது சிலர் எழுப்பும் கேள்வி. இயேசுநாதர் நீர் மேல் நடந்து சென்றதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல பல மகான்களின் வாழ்க்கையிலும் இது போன்ற அதிசயச் செயல்கள் நிகழ்ந்துள்ளன. இவை எல்லாம் சாத்தியம் தானா?
நிச்சயம் சாத்தியமே யோக முறையில் சில பயிற்சிகளை மேற் கொண்டால் இவை அனைத்தும் சாத்தியமே!
தண்ணீரில் ஒரு கட்டையைப் போட்டால் அது மிதக்கிறது. காரணம் நீரின் அடர்த்தியை விட அதன் எடை குறைவு. பலூன் காற்றில் மிதக்கிறது. காரணம், அதில் காற்று இருக்கிறது. அது போல நமது உடலை யோகாப்யாச முறையில் எடையற்றதாக்கி காற்றினால் நிரப்பினால் நீரின் மேல் மிதக்க முடியும்.
நெருப்பில் பாய்தல்
ஒரு சிறு பொறி நம் மீது பட்டாலே உடல் வெந்து விடும். ஆனால் ஒருவர் நெருப்பின் மேய் அமர்கிறார், படுக்கிறார். யோக முறையினால் இது சாத்தியமே என்கிறார். தஞ்சாவூரில் இருக்கும் இந்த யோகி. குருமூலம் இதனைக் கற்றுக் கொண்டதாக இவர் கூறுகிறார்.
அதிசயங்கள் எல்லாம் சாதாரண புலனறிவிற்கு அப்பாற்பட்டவை. அதனால்தான் அது பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த யோகியின் இப்பயிற்சியும் இப்படியே!
வெளிநாட்டினர் பலர் இவரை வந்து சந்தித்தும், பேட்டி எடுத்தும், புகைப்படம், வீடியோ எடுத்தும் சென்று வருகின்றனர்.
இவர் நெருப்பில் பாயும் அந்தச் சில படங்கள் கீழே….









times of india also carried a news item about him
yes sir. The Great Indian Yogi
Could you please let us know the details of this yogi? Thank you