ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்:
”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது. சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு. ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன. ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு. பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.”
இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.
ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.“ என்கிறார் அவர்.
மேலும், ‘அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர், ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம். பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம். அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.
அவர், ”இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன” என்று அவர் கூறியிருப்பது நம்மை வியலாப்பிலாழ்த்துகிறது.
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.
மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

venkat சொன்னது,
ஆகஸ்ட்21, 2009 இல் 10:13 காலை
இருநாள் முன்பு விஜய் டி.வியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். சித்தரின் மறுபிறவி என்று சொல்லி ஒரு சிறுவனையும், அவன் மரணம் பற்றிய செய்திகளையும், சில அபூர்வ புகைப்படங்களையும் காட்டினார்கள். அதில் ஆவிகள் பற்றிய புகைப்படங்களும், ஆய்வாளர் ஒருவரது கருத்தும் இடம் பெற்றன. சில மாதங்கள் முன்பு ஒரு பெண்மணி ’ஜோதா அக்பரின் மறுபிறவி நான்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இது உண்மையா, மறுபிறவி பற்றி உங்கள் கருத்தென்ன? அது பற்றிய விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இயலுமா?
நான் இவற்றை நம்பவில்லை. அதேசமயம் நம்பாமலும் இல்லை. எனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே இவற்றைக் கேட்கிறேன்.
அன்புடன்
வெங்கட், புரசைவாக்கம்
ரமணன் சொன்னது,
ஆகஸ்ட்21, 2009 இல் 4:13 மாலை
அன்புள்ள வெங்கட்,
முற்பிறவி-மறுபிறவி பற்றிய தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். தற்போது ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அவர்கள் எழுதிய ’After the death’ என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலும் ஆவி உலகம், மறுபிறவி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. இன்னும் சில நூல்களும் படிக்க வேண்டி உள்ளன. அதன் பின் எனது கருத்துக்களை எழுதுகிறேன். தங்கள் கருத்திற்கு நன்றி!
அன்புடன்
ரமணன்
Suman சொன்னது,
செப்டம்பர்15, 2009 இல் 1:05 காலை
“அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.
இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.
எனக்கே இதில் அனுபவம் உண்டு.
1941 – ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.
அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.
அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.
ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.
அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!
சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.
மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.
மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.
இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.”
நீங்கள் கண்ணதாசன் எழுதியதாகக்கூறும் இந்த ஆக்கம் வேறொருவரால் எழுதப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது . தயவு செய்து தெளிவுபடுத்தவும்… ஒரு ஆக்கத்தை வெளியிடமுன்னர் இது போன்ற விடயங்களை ஆராயவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்…
ஆக்கம் http://eegarai.darkbb.com/-f17/—-t2527-10.htm எனும் தளத்திலுள்ளது..
நன்றி
ramanans சொன்னது,
செப்டம்பர்15, 2009 இல் 5:20 மாலை
இல்லையே. கண்ணதாசன் கூறுவதாகத் தானே அக் கட்டுரை கூறுகிறது. சந்தேகம் இருந்தால் ஒருமுறை மீண்டும் படித்துப் பாருங்கள். அல்லது அர்த்தமுள்ள இந்துமதம் நூலை வாசித்துப் பாருங்கள். அதில்தான் கண்ணதாசன் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய கட்டுரையைத் தான் ’உலவும் ஆவிகள்’ என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கிறார்.
//அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்// என்று தொடங்கி அக்கட்டுரையை எழுதியிருப்பது சாட்சாத் கண்ணதாசன் தான். வேறு யாரோ அல்ல.
தங்கள் கருத்திற்கு என் நன்றி சுமன்
அன்புடன்
ரமணன்
mythili சொன்னது,
செப்டம்பர்28, 2009 இல் 11:47 காலை
i want medium tamil
ramanans சொன்னது,
செப்டம்பர்28, 2009 இல் 1:17 மாலை
Contact Mr.V.Ravichandran. He is the very good medium.
p jayaraman சொன்னது,
நவம்பர்3, 2009 இல் 7:53 மாலை
i want v.ravichandran add and email
ramanans சொன்னது,
நவம்பர்3, 2009 இல் 10:12 மாலை
spiritworldresearch@yahoo.com – this is V.Ravichandran sir’s email.
ramanan
Krishnan சொன்னது,
நவம்பர்19, 2009 இல் 9:45 மாலை
Is there any possibility to sepak with the person who committed suicide? Please answer me…
ramanans சொன்னது,
நவம்பர்19, 2009 இல் 10:16 மாலை
Yes. Possibilities are there. But that is not adviceble. Some time dangerous also.
Sashi சொன்னது,
நவம்பர்27, 2009 இல் 5:08 மாலை
Please give me details. I want to talk to my friend who
ended his life in the railway track…
Sashi சொன்னது,
நவம்பர்19, 2009 இல் 9:48 மாலை
Can I have Mr.Ravi chandran’s contact number please…
ramanans சொன்னது,
நவம்பர்19, 2009 இல் 10:18 மாலை
spiritworldresearch@yahoo.com – this is V.Ravichandran sir’s email. vipravichandran@yahoo.com. This is another mail. You may send the mail and talk to him. Otherwise i’ll try to get his office no.
ramesh சொன்னது,
நவம்பர்26, 2009 இல் 10:04 காலை
Can I have Mr.Ravi chandran’s sir contact number please…
ramesh சொன்னது,
நவம்பர்26, 2009 இல் 10:11 காலை
pls.. i want Mr.Ravi chandran’s sir office address: i am in tirupur.
ramanans சொன்னது,
நவம்பர்26, 2009 இல் 12:09 மாலை
Megaduthan Pathippakam
No.7, Chinnappa Street,
(behind Rathna cafe)
Triplicane, Chennai – 600 005
ph: 52155831 (???????)
ramanans சொன்னது,
நவம்பர்26, 2009 இல் 12:11 மாலை
spiritworldresearch@yahoo.com – this is V.Ravichandran’s email. vipravichandran@yahoo.com. This is another mail. You may send the mail and talk to him.
Sashi சொன்னது,
நவம்பர்27, 2009 இல் 5:11 மாலை
I got Ravi chandran’s contact number 98406 41352.
Sashi சொன்னது,
நவம்பர்27, 2009 இல் 5:14 மாலை
His office is in Triplicane and his office number is 044-42155831