வாழ்க்கை

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

அது
சிறு கவிதையோ
பெருங்கவிதையோ
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

சாலையைக் கடக்கும் பொழுதோ..
சோலையில் சுகிக்கும் பொழுதோ..

கடலலையின் சத்தத்திலோ..
காதலியின் முத்தத்திலோ..

சண்டையின் உச்சத்திலோ..
சாக்கடையின் பக்கத்திலோ..

மொட்டைமாடிப் புணர்ச்சியிலோ..
தொட்டணைத்த நெகிழ்ச்சியிலோ..

ஒரு கவிதை
எங்கு வேண்டுமானாலும்
பிறக்கலாம்

கட்டிலின் சத்தமும்
கவிதை தான்
தொட்டிலின் சிணுங்கலும்
கவிதை தான்
குமரியின் சிரிப்பும்
கவிதை தான்
குழந்தையின் அழுகையும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்பொழுது வேண்டுமானாலும்
உருவாகலாம்

நண்பனின் மரணமும்
கவிதை தான்
நடிகையின் துயரமும்
கவிதை தான்

நெருங்கியவர்களின் பிரிவும்
கவிதை தான்
பிரிந்தவர்களின் நெருக்கமும்
கவிதை தான்

ஒரு கவிதை
எப்படி வேண்டுமானாலும்
உருவாகலாம்

நேசிப்பின் இழப்புகள்
கவிதையாவது
வாழ்வின்
அர்த்தமா?
அனர்த்தமா?

2 மறுமொழிகள்

  1. karpagm சொன்னது,

    செப்டம்பர்30, 2009 இல் 7:08 மாலை

    i like so much its very nice and i realy understadings meanins

    • ramanans சொன்னது,

      செப்டம்பர்30, 2009 இல் 7:53 மாலை

      Thankyou very much for your comment.


மறுமொழியொன்றை வழங்குக