தேடல்
பதிந்தவர் ramanans மேல் பெப்ரவரி 3, 2008
விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..
நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் மனையாளின் பசி…
காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..
பாலியல் பெண்
அறிந்திருப்பாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
கிழவனா
என்று..
விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்கிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்.